குறட்டைவிடும் உளவுத்துறை- கொட்டம்போடும் கொலையாளிகள்... கோட்டையில் ரெடியாகும் சாட்டை!
சென்னை: மாவட்டங்களில் உளவுத்துறையினர் செயல்பாடுகளால் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் உளவுத்துறையில் மிகப் பெரிய அதிரடி மாற்றங்கள் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்கின்றன செயின்ட் ஜார்ஜ் கோட்டை வட்டாரங்கள்.
சென்னை முதல் குமரி வரை திடீரென கொலை, கொள்ளை, கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதுவும் தலையை துண்டித்து எடுக்கும் கூலிப்படையின் கொடூரத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லையில் நடந்த பழிக்கு பழி கொலைகள், திண்டுக்கல் பழிக்கு பழி கொலைகள், வாணியம்பாடி படுகொலை ஆகியவை தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. திமுக ஆட்சியில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்குகின்றன என்கிற விமர்சனமும் எழத் தொடங்கிவிட்டது.

ஓபிஎஸ் அறிக்கை
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த 10 நாள்களாக ஆங்காங்கே கொலைக் குற்றங்கள் நிகழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது என சுட்டிக்காட்டி இருந்தார். இப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தால் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் சிக்கலாகிவிடுமே என முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாம்.

உளவுத்துறை மீது அதிருப்தி
இதனால் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னதான் உளவுத்துறை செய்து கொண்டிருக்கிறது... குற்றச்செயல்கள் நடக்கப் போகிறது..அல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது என உளவுத்துறைக்கு முன் கூட்டி தெரிகிறதா? இல்லையா? என்ற கேள்வியை உயரதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அப்போது உளவுத்துறை தொடர்பான சில விவரங்கள் முதல்வர் ஸ்டாலினிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
Recommended Video

ஜாதி ஆதிக்கம்
அதாவது மாவட்ட அளவில் உளவுத்துறையினர் செயல்பாடு பெரும்பாலும் திருப்தி தரவில்லை. அதிலும் குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது.. அதனால் குற்றங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் எதுவும் உளவுத் துறையிடம் இருந்து வருவதே இல்லை. இதில்தான் அடிப்படையில் மாற்றம் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அந்த உயர் அதிகாரிகள் எடுத்து காட்டி இருக்கின்றனர்.

விரைவில் அதிரடி மாற்றம்
இதையடுத்து மாவட்ட உளவுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் எந்த நேரத்திலும் நடக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தமிழக காவல்துறை உயரதிகாரிகள் 10 பேர் நேற்று மாற்றப்பட்டனர். இந்த மாறுதலில் அமைச்சர்கள் சிலரின் சிபாரிசுகளும் அடங்கும். குறிப்பாக அமைச்சர் கே.என்.நேருவின் விருப்பத்தை ஏற்று அவரது சிபாரிசை நிறைவேற்றியுள்ளார் முதல்வர். ஸ்டாலின் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications