ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம்- கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்பாக ஆட்சிப் பணி விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; இந்த நடவடிக்கையானது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது; மாநில சுயாட்சிக்கும் எதிரானது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிகளுக்கு மாற்ற மாநில அரசுகளின் ஒப்புதல் கட்டாயம் தேவை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு பணிக்கு எடுத்து கொள்ள முடியாது.

மாநில அரசு அதிகாரம் பறிப்பு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கான வீட்டோ அதிகாரமாக இருந்து வருகிறது. இதனை மாற்றுவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. அதில் மத்திய அரசின் ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டிருந்தது.

மமதா எதிர்ப்பு
இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முதன் முதலாக கலகக் குரல் எழுப்பினார். பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பிய மமதா பானர்ஜி, கூட்டாட்சியை சிதைக்கும் நடவடிக்கை என்றார். இதேபோல் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முயற்சியை விமர்சித்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுயாட்சி, கூட்டாட்சிக்கு எதிரானது
மேலும், மத்திய அரசு, ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையானது மாநில சுயாட்சிக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது; இந்த திருத்தங்கள் மூலம் மத்திய அரசிடமே அனைத்து அதிகாரங்களும் குவிய வழி ஏற்படும். ஏற்கனவே மாநில அரசுகளில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இல்லாத நிலை உள்ளது. தற்போது மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகளை அனுப்பினால் மாநில அரசு நிர்வாகம் முடங்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications