மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன?
சென்னை: மார்ச் 18ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்சிகளுடன் ஒப்பந்தத்தை நிறைவு செய்துவிடலாம் என்றும், கடைசி நாளில் விசிக மற்றும் தேமுதிக உடனான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி திமுக தலைமை தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக திடீரென மதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்தது. 4 தொகுதிகள், உதயசூரியன் சின்னம் என்று நேரடியாக திமுக கூறிவிட்ட சூழலில், துரை வைகோவின் பிடிவாதம் காரணமாக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதேபோல் மதிமுக உடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த பின், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அத்தனை கட்சிகளிடமும் ஒரு தொகுதி குறைக்கப்பட்டு சூழலில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளுக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை ஆலோசித்திருக்கிறது. இதற்கு ஒரு கட்டத்தில் சிபிஐ இறங்கி வர, திடீரென சிபிஎம் நீங்கள் போனால் எங்களையும் அதே தொகுதி எண்ணிக்கைக்கு தள்ளிவிடுவார்கள் என்று தடுத்திருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது.
ஆனால் விசிகவுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். ஆனால் எத்தனை தொகுதிகள் என்பதை வெளிப்படையாக சொல்லாததால், திருமாவளவன் யாருடனும் ஆலோசிக்காமல் அமைதி காப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் விசிகவிடம் தொகுதிகளை குறைத்து கொள்ளுங்கள் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழு இதுவரை பேச்சை எடுக்கவில்லை.
அந்தப் பக்கம் திமுக கூட்டணியில் 3வது பெரிய கட்சியாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேமுதிகவுக்கு உள்ளது. இதனால் விசிகவை விட ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக இருக்கிறாராம். இதன் காரணமாகவே இந்த இரு கட்சிகளையும் கடைசி நேரத்தில் அழைத்து கொள்ளலாம் என்று திமுக தலைமை கருதுவதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications