மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன?
சென்னை: மார்ச் 18ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்சிகளுடன் ஒப்பந்தத்தை நிறைவு செய்துவிடலாம் என்றும், கடைசி நாளில் விசிக மற்றும் தேமுதிக உடனான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி திமுக தலைமை தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக திடீரென மதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்தது. 4 தொகுதிகள், உதயசூரியன் சின்னம் என்று நேரடியாக திமுக கூறிவிட்ட சூழலில், துரை வைகோவின் பிடிவாதம் காரணமாக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதேபோல் மதிமுக உடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த பின், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அத்தனை கட்சிகளிடமும் ஒரு தொகுதி குறைக்கப்பட்டு சூழலில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளுக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை ஆலோசித்திருக்கிறது. இதற்கு ஒரு கட்டத்தில் சிபிஐ இறங்கி வர, திடீரென சிபிஎம் நீங்கள் போனால் எங்களையும் அதே தொகுதி எண்ணிக்கைக்கு தள்ளிவிடுவார்கள் என்று தடுத்திருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது.
ஆனால் விசிகவுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். ஆனால் எத்தனை தொகுதிகள் என்பதை வெளிப்படையாக சொல்லாததால், திருமாவளவன் யாருடனும் ஆலோசிக்காமல் அமைதி காப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் விசிகவிடம் தொகுதிகளை குறைத்து கொள்ளுங்கள் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழு இதுவரை பேச்சை எடுக்கவில்லை.
அந்தப் பக்கம் திமுக கூட்டணியில் 3வது பெரிய கட்சியாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேமுதிகவுக்கு உள்ளது. இதனால் விசிகவை விட ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக இருக்கிறாராம். இதன் காரணமாகவே இந்த இரு கட்சிகளையும் கடைசி நேரத்தில் அழைத்து கொள்ளலாம் என்று திமுக தலைமை கருதுவதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
போளூர் தொகுதியை விட்டுக் கொடுத்தாரா அக்ரி கிருஷ்ணமூர்த்தி? மகனுக்காக இறங்கிய அமைச்சர் எவ வேலு! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம்












Click it and Unblock the Notifications