20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கும் போது அதிருப்தி இருக்கும் நிர்வாகிகளுடன் பேசி ஒவ்வொரு கட்சியும் எதிர்முகாமில் இருக்கும் பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இம்முறை திமுகவில் ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு அதிமுகவில் இருந்து பலரும் படையெடுத்து வருகிறார். இதற்கான பின்னணியில் திமுக என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
சமீப காலமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறோம் என்று கூறுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நிலோஃபர் கஃபீல், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், ஜெயந்தி பத்மநாபன், மருது அழகுராஜ், மைத்ரேயன், பழனியப்பன் என்று பலரும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் என்று சொல்லி முடியாத அளவிற்கு லிஸ்ட் எகிறி இருக்கிறது. அதிமுகவில் இருந்து வருபவர்களை பல்வேறு கணக்குகளுடன் தான் அறிவாலயம் அரவணைப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றிக்கு உதவியவர் செந்தில் பாலாஜி. இதனால் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் திமுக இழுத்து கொண்டது.
இதன் பலனாக கரூர் மாவட்டம் திமுக வசமானது. அதேபோல் டெல்டா மாவட்டத்தில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் திமுகவுக்கு தனியாளாக மிகப்பெரிய சவால் கொடுத்து வந்தவர். இப்போது வைத்திலிங்கம் திமுக பக்கம் வந்துள்ளதால், ஒரத்தநாடு தொகுதியில் சிக்கல் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. சிவி சண்முகத்தை கடந்த தேர்தலிலேயே லட்சுமணனை வைத்து திமுக வீழ்த்தியது.
இதனால் சிவி சண்முகம் தொகுதி மாற முடிவு செய்துவிட்டார். அதேபோல் கோவில்பட்டி தொகுதியில் மாணிக்கராஜா, ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா, ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அந்தந்த தொகுதியில் வெல்லக் கூடிய முகங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா விரும்பி போட்டியிட்ட தேனி மாவட்டத்தில் இனி முக்குலத்தோர் சமூக வாக்குகள் திமுகவுக்கு விழப் போகிறது.
அதுமட்டுமல்லாமல் இப்படி திமுகவில் இணையும் பலருக்கும் சுமார் 20 தொகுதிகளை ஒதுக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. அந்தந்த தொகுதி நிலவரம் பார்த்துவிட்டு தான் இணைப்பு படலம் நடக்கிறது என்கின்றனர். இதன் மூலமாக கடந்த முறை வென்ற தொகுதிகளில் சில கைவிட்டு செல்லும் பட்சத்தில் எளிதாக சரிகட்ட முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார்.
அதேபோல் அதிமுகவில் இருந்து வருவோரிக் களத்தில் பணியாற்றுவோரை தான் திமுக விரும்புகிறது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபிஎஸ், கார்த்திக் தொண்டைமான், மருது அழகுராஜ் உள்ளிட்ட அனைவருமே களத்தில் பணியாற்றுபவர்கள். இதன் மூலமாக அதிமுகவை களத்திலும் பலவீனப்படுத்த முடியும் என்று திமுக நம்புகிறது.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் கடந்து 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஓரளவு கவுரமான வெற்றியை பெற்றதற்கு களத்தில் பணியாற்றும் செயல் வீரர்கள் தான் முக்கிய காரணம். ஆனால் இம்முறை எடப்பாடி பழனிசாமி யார் கட்சியை விட்டு சென்றாலும் கண்டு கொள்வதில்லை என்று அதிமுகவினரே புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications