வீடுகளில் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி பில் வருமா? மின் வாரியம் விளக்கம்!
சென்னை: ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவின்படி மின் கட்டணம் வசூலிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையல்ல, சமூக வலைதளங்களில் பரவும் தகவலை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
வீட்டு மின் இணைப்புகளில் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால், வணிக நிறுவனங்கள், தொழில்ற்சாலைகளுக்கு வசூலிக்கப்படுவது போல அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் உண்மையில்லை என்று தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளில் வீட்டு மின் இணைப்புகள் 2.42 கோடி மட்டுமே. தமிழ்நாட்டில் தற்போது மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஆண்டுக்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால், வீட்டு மின் இணைப்புகளுக்கு வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்படுவது போல, வர்த்தக பிரிவின்படி மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் பரவியுள்ளது. இந்நிலையில், அது தவறான தகவல் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 601 பேர் மட்டுமே 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இது மொத்த வீட்டு இணைப்புகளில் 4.08 சதவீதம் மட்டுமே. மற்ற 96 சதவீதம் பேர் குறைவாகவே மின்சாரம் பயன்படுத்துகின்றனர். 100 யூனிட் வரை எந்த வித கட்டணமும் இல்லை என்பது தொடர்கிறது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications