போகி பண்டிகை- விவசாய சட்ட நகல்களை தீயிட்டு எரித்து விவசாயிகள் போராட்டம்
சென்னை: போகி பண்டிகையின் போது பழைய பொருட்களுடன் மத்திய அரசின் விவசாய சட்ட நகல்களையும் தீயில் எரித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஒன்றரை மாதங்களாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு குழுவை அமைத்துள்ளது.
ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேரும் விவசாய சட்டங்களை ஆதரிப்பவர்கள்; ஆகையால் இந்த குழுவை ஏற்க முடியாது என போராடும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் தீயிட்டு எரிப்பது வழக்கம்.
தமிழகத்தில் பழைய பொருட்களுடன் மத்திய அரசின் 3 விவசாய சட்ட நகல்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன. அப்போது மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.