அரண்மனை விவகாரம்- அங்கிட்டு பொரணி பேசிகிட்டு இங்கிட்டு பொரியல் கூட்டா? இது மெய்யா சிங்கம் கோப்பால்?
சென்னை: தமிழக அரசியலில் எப்போதும் அரண்மனை விவகாரங்கள் அதகளப்படுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்தான் மாறுவதில்லை.
நாடு விடுதலை அடைந்த காலம் இன்று வரை வாரிசுகள், ஊழல்கள், திடுமென சாம்ராஜ்யங்கள் செல்வத்தில் திளைப்பதும் சடுதியில் சாய்ந்து நடுத்தெருவுக்குப் போவதும் தொடருகிறது.

இந்த பட்டியலில் அரண்மனை விவகாரத்தை வில்லங்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர் ஆளும் அரசின் புதிய வில்லன்கள். ஆனால் இவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தானோ? என்கிற வகையில் அமோக அறுவடையை நடத்துகிறதாம் வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் தளபதிகள் கூட்டம்.
ஆம். ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் இடைவிடாமல் அரண்மனை நிறுவனத்தை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறார் அந்த தலைவர். அப்படி செய்கிறார்கள்.. இப்படி செய்துவிட்டார்கள் என்றெல்லாம் விடா கண்டன் கொடா கண்டன் கணக்காய் பட்டியல் பட்டியலாக படிக்கிறார் சிங்கமாக உருமாறிய தலைவர்.
இந்த போக்கால் எத்தனை தலைகள் உருண்டுவிழுமோ என்றெல்லாம் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருந்தாலும்.. அப்படி எல்லாம் நடக்காது; ஏனெனில் சிங்கத் தலைவரின் சிம்மாசனத்துக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களே அரண்மனை நிறுவனத்தின் கூட்டாளிகளாகிவிட்டார்களே என கண்சிமிட்டுகிறார்கள் சிலர்.
இந்த கூத்தும் மேற்கு மண்டலத்தில்தான் நடந்திருக்கிறதாம்.. இந்த புதிய பொரியல் கூட்டணியால் அரண்மனை நிறுவனங்கள் மீது இனி மேம்போக்காகத்தான் சிங்கம் கோப்பால் பேசுவாராம்... இல்லை எனில் உள்வீட்டு மேட்டரும் சிரிப்பாய் சிரித்துவிடுமாம்!












Click it and Unblock the Notifications