நடுரோட்டில் பேனர்.. பறிபோன சுபஸ்ரீ உயிர்.. பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை!
பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
Recommended Video
சென்னை: பள்ளிக்கரணை நடுரோட்டில் பேனர் வைத்த விவகாரத்தில்.. இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தமிழக அரசு அதிர வைத்துள்ளது.
பிளக்ஸ் பேனர் பறந்து விழுந்து சுபஸ்ரீ பலியான சம்பவத்தினால், நீதிமன்றம் கொதித்து போய் உள்ளது. இன்னமும் இது சம்பந்தமாக முக்கிய குற்றவாளி ஜெயகோபாலை கைது செய்யாமல் உள்ளனர். தனிப்படை வைத்து தேடியும் அவரை காணோம் என்று சொல்கிறார்கள் போலீசார். இன்னும் தேடி கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அன்று பேனர் வைத்ததன் எதிரொலியாக மறுநாளே மாநிலம் முழுவதும் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதேபோல, அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் தங்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என்று கண்டிப்பு உத்தரவு போடவும், அதற்கு தொண்டர்களும், ரசிகர்களும் கீழ்ப்படிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டனத்தை தொடர்ந்து குவித்து வருவதால் தமிழக அரசும் சுதாரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.
போலீஸ் சட்டம், 3 பி என்ற பிரிவின் கீழ் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பிரிவின்படி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு இப்படி எந்த சலுகையும் இன்ஸ்பெக்டருக்கு கிடைக்காது. உயர்நீதிமன்றத்தின் கோபத்தைத் தணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம் தொடர்ந்து ஜெயகோபால் தலைமறைவாகவே இருக்கிறார். இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுத்தது போல ஜெயகோபாலையும் போலீஸார் சீக்கிரமாக உள்ளே தள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications