சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான மின் கணக்கீடு எடுக்கப்படாது! அப்போ பேமண்ட்?
சென்னை: அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு 6 முறை மின் கட்டணம் செலுத்த வேண்டி வரும். இந்த மின் கட்டணம் செலுத்துவதற்காக தமிழக மின்சார வாரியம் அவரவர் பயன்பாட்டை பொருத்து டாரீஃப் ரேட்டுகளை வைத்துள்ளது.

அந்த வகையில்தான் மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார வாரிய ஊழியர் வீடு வீடாக வந்து மின் கணக்கீடு செய்வார். அட்டையில் எத்தனை யூனிட்கள் வந்துள்ளன. எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக கொடுத்துவிடுவார்கள்.
அதை வைத்து நாம் காலகெடுவுக்குள் மின்சார வாரியத்திலோ அல்லது இணையதள வாயிலாகவோ பணத்தை செலுத்திக் கொள்ளலாம். இந்த நிலையில் அக்டோபர் மாதம் வீடுகளுக்கு வந்து மின்சார வாரிய ஊழியர் கணக்கெடுத்து சென்றுவிட்டார். அதற்கான மின் கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மழை, வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றை மோட்டார் போட்டு போட்டு வடித்தாலும் இன்னும் மாளவில்லை. இந்த நிலையில் டிசம்பர் மாதம் மின் கட்டண கணக்கீடு எடுக்கப்பட வேண்டும்.
ஆனால் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் மாத கணக்கீட்டின்படியே மின் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications