குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. ரேஷன் கடைகளில் விரல்ரேகை சரிபார்ப்பில் அதிரடி.. நிம்மதி
சென்னை: புயல் காரணமாக இயல்பு வாழ்க்கையில் கடலோர மாவட்ட மக்கள் அவதிப்பட்டு வரும்நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவுவதற்காகவே, ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடைகள் வாயிலாக அரசு சார்பில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுவதால் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.. அதேசமயம் ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன்தாரர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து கைரேகை வைத்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
கைரேகை: இதற்காக அனைத்து கடைகளுக்கும், பிரின்டர் உடன் கூடிய கைரேகை பதிவு செய்யும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் பதிவு செய்யப்பட்டது.
எனினும், வெளியூர்களில் வசித்து வருவோர், தினக்கூலி வேலைகளுக்குச் செல்வோர், தாங்கள் நேரடியாக ரேஷன் கடை இயங்கும் நேரத்திற்குச் சென்று காத்திருந்து கைரேகை பதிவு செய்ய இயலாமல் அவதிப்பட்டனர்.
கட்டாயப்படுத்தக்கூடாது: இதையடுத்துதான், கைரேகை பதிவிற்காக ரேஷன் கடைகளுக்கு வரும்படி யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்றும், குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை ஊழியர்கள் முடிக்க வேண்டும் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த பெஞ்சல் புயலால், கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள.. குறிப்பாக, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழையால், பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டிருப்பதால், ரேஷன் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க அதிக நேரம் காத்திருக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
மகிழ்ச்சி, நிம்மதி: அதனால்தான், விரல் ரேகை சரிபார்ப்பில் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், விரல் ரேகை பதிவாகவில்லை என்றாலும், கார்டுதாரர்களை திருப்பி அனுப்பாமல், கார்டு ஸ்கேன் செய்து, பொருட்களை விரைவாக வழங்குமாறு ரேஷன் ஊழியர்களை, உணவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமையன்று, பாயிண்ட் ஆப் சேல் கருவியில் கைரேகை பதிவில் பிரச்சனை ஏற்பட்டதாக சொன்னார்கள்.. பிறகு, செவ்வாய்கிழமையும் இதே பிரச்சனை ஏற்பட்டதால், பொதுமக்களால் ரேஷன் பொருட்களை கடைகளில் வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலைமை ஏற்பட்டது. ஆனால், ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சாப்ட்வேரில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்படும் என்று ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications