புதிய ஆதார் கிட் திட்டம்… வீடு தேடி வருவார்கள்.. தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
சென்னை : 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளும் திட்டத்தை 13 கோடி செலவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு, அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி உள்ளார்.
13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், லேப்டாப்புகள், பயோ மெட்ரிக் இயந்திரங்கள் உள்ளடக்கிய 1,302 ஆதார் கிட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த ஆதார் கிட்கள் 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கு அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி உள்ளிட்டவைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப் பட்ட கைபேசி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications