கோவில் பணியாளர்களுக்கு அடிச்சது ‘ஜாக்பாட்’: அகவிலைப்படி மேலும் 4% உயர்வு.. தமிழக அரசு கொடுத்த ட்ரீட்
சென்னை: திருக்கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 46% ஆக உயர்த்தி கோவில் பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது தமிழக அரசு.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.10.2023 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 46% ஆக உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 42% ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46% ஆக உயர்த்தியுள்ளது.

அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications