ஆன்மீகம் வளர சனாதன தர்மம் தேவை- தமிழக ஆளுநர் ஆர் என் ரவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை என தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் ரவி மேலும் பேசுகையில் ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் தேவை. இந்தியாவில் ராணுவம், பொருளாதார வளர்ச்சி அடைவதை போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம் ஆகிறது.

TN Governor R.N.Ravi says that Sanatana dharma to be needed for the growth of spirituality

ஆன்மீகத்தில் வளர சனாதன தர்மம் வழிமுறை இருக்கும். தொடர்ச்சியான ஆன்மீகத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும். இந்தியாவின் தலைமைத்துவம் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது வலிமையான தலைமை இந்தியாவை ஆள்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நாட்டை பற்றி கூறுகிறோம். அதையேதான் நமது சனாதனமும் வலியுறுத்துகிறது. சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து கந்தகர், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவால் தகர்க்கப்பட்டன. இதிலிருந்தே சனாதனத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+