உளவுத்துறை ஐ.ஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் துயர வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க்கை, உளவுத்துறை ஐஜியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவ கையில் நேற்று நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு புதிய நிதித்துறைச் செயலாளராக சித்திக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

Asra Garg

இந்தநிலையில் இன்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில் வேலன் மாற்றப்பட்டு அவினாஷ் குமார் ஐபிஎஸ் உளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவனாஷ் குமார் மாற்றப்பட்டு உளவுத் துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2025 செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க அப்போதைய திமுக அரசு, அஸ்ரா கார்க் தலைமையில் தான் விசாரணை குழுவை அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஸ்ரா கார்க்கை உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது தமிழக அரசு. கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கை, விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+