பிளஸ் 2 தேர்வு நடக்குமா? நடக்காதா? முதல்வர் விரைவில் அறிவிப்பு.. அறிக்கை சமர்பித்தார் அன்பில் மகேஷ்!
சென்னை: பிளஸ் 2 தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை அளித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? இல்லையா? என்பது குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு
அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் ஆலோசனை
இதற்கிடையே சிபி.எஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனால் அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களிடன் பெற்றோர்களிடம் முதலில் ஆலோசனை நடத்தினார்கள்.

பெற்றோரின் கருத்துக்கள்
பெற்றோர்களின் கருத்துக்களும், அவர்களிடம் மாணவர்கள் கூறிய கருத்துக்களும் கேட்கப்பட்டன. இதனை தொடந்து மருத்துவ, மனோதத்துவ நிபுணர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அவர்கள் கூறிய கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சி உறுப்பினர்களிடமும் ஆலோசனை நடைபெற்றது.

அறிக்கை தயாரிப்பு
இதில் சில கட்சிகள் தேர்வை நடத்தலாம் என்று கூறின. பாமக உள்ளிட்ட சில கட்சிகள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டது. இவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் அதில் பதியப்பட்டது.

முதல்வர் விரைவில் அறிவிப்பார்
இந்த நிலையில் இந்த அறிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று மாலை சரம்பித்தார். ஆலோசனையின்போது அனைவரும் கூறிய கருத்துக்களை முதல்வரிடம் அவர் விளக்கினார். இனி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிக்கையை வைத்து ஒரு முடிவெடுப்பார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடக்குமா? இல்லையா? என்பது குறித்து ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications