ஓ.. தப்பா பேசிட்டேன்.. திண்டுக்கல் சீனிவாசன் தடுமாற்ற பேச்சு.. சட்டசபையில் சிரிப்பலை!
சென்னை: 2019-2020ம் ஆண்டு மானியக்கோரிக்கை என்பதற்கு பதில் 2010-2011 மானியக்கோரிக்கை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது.
பொதுவாக மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார் திண்டுக்கல் சீனிவாசன். எதையும் உள்நோக்கத்துடனும், சர்ச்சை தேவை என்பதற்காகவோ பேசமாட்டார்.
வெள்ளந்தி பேச்சுதான் என்றாலும், இவர் வாயை திறந்தாலே அது வைரலாகி விடும் அளவுக்கு சென்றுவிடுகிறது. இப்போதுகூட அப்படிதான் ஒரு சமாச்சாரம் நடந்து உள்ளது.
சட்டசபையில் சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்து பேச தொடங்கினார். அப்போது, "2010-11ம் ஆண்டு மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தில் நான் பதில் அளித்து பேசுகிறேன்"என்று சீரியஸாக பேச ஆரம்பித்தார்.
கிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. மானத்தை கப்பல் ஏத்திட்டாங்க.. கஸ்தூரி ட்வீட்
உடனே திமுக எம்எல்ஏக்கள், "2010-11 இல்லை.. 2019-2020ம் ஆண்டு என்று பேசுங்கள்" என்று சத்தமாக சொன்னார்கள். உடனே அமைச்சரும், "ஓ.. தவறாக சொல்லிவிட்டேன்.. 2019-2020ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுகிறேன்" என்றார். இதைதொடர்ந்து திண்டுக்கல்லார் பேச ஆரம்பித்தாலும், அவையில் சிரிப்பு சத்தம் அடங்க கொஞ்சநேரம் ஆகிவிட்டது.
இருந்தாலும், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, ஒரு மூத்த அரசியல் தலைவர், அதிலும் அமைச்சர்.. இப்படி உளறி வருவது தொண்டர்களுக்கு இன்னும் அதிர்ச்சியைதான் தந்து வருகிறது.