கர்நாடகாவில் ஜனநாயகப் படுகொலை.. கனத்த மவுனம் காக்கும் பக்கத்து வீட்டு 'பெரியார் மண்'
Recommended Video
சென்னை: மாநில உரிமைகளையும் ஜனநாயக மாண்புகளையும் கட்டிக் காப்பாற்ற பிறந்ததாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழகம், கர்நாடகாவில் பாஜகவால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட விவகாரத்தில் கனத்த மவுனத்தை வெளிப்படுத்துவது பல அரசியல் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பது பாஜகவின் சித்தாந்தமாகவே மாறிவிட்டது. கட்சித் தாவல், கட்சிகளையே கபளீகரம் செய்வது என அதிகாரப் பசிக்காக அத்தனையையுமே செய்கிறது பாஜக.
மிசோரமில் தாங்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சியே அல்ல என்பதற்காக இளைஞரணியைப் போல மிஷினரிகள் அணியை உருவாக்கியிருக்கிறது.

கொத்து கொத்தாக
கர்நாடகாவில் புதிய அணுகுமுறையாக 16 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி அரசுக்கு பெரும்பான்மையை இழக்க வைத்திருக்கிறது பாஜக. இப்போதெல்லாம் கொத்து கொத்தாக எம்.ஏல்.ஏக்கள், எம்.பிக்களை வளைப்பது பாஜகவின் பாணி.

ஜனநாயக படுகொலைதான்..
ஒரே தேசம் ஒரே கட்சி என்கிற இந்துராஷ்டிரா கொள்கையை நோக்கி குதிரை சவாரி செய்யும் பாஜகவுக்கு கடிவாளம் போட எந்த கட்சியும் முன்வரவே இல்லை. கர்நாடகாவில் பாஜக செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

மவுனமாக பெரியார் மண்
இந்தப் படுகொலையை கண்டிக்கும் காங்கிரஸ் அல்லாதவர்களின் குரலாக மாயாவதிதான் வெளியே வந்துள்ளார். ஜனநாயகம், மாநில சுயாட்சி, தன்னாட்சி என்றெல்லாம் பெருமை பேசும் தந்தை பெரியார் மண் அதாவது தமிழ்நாடு, கனத்த மவுனமாக இருக்கிறது.

கனத்த மவுனம் ஏன்?
கர்நாடகாவில் தாமரை மலருகிறது என கூப்பாடு போகிற பாஜகவின் குரலை விமர்சிக்க எந்த தலைவருமே முன்வரவில்லை. அதிகார மிரட்டல்கள் முன்பு உரிமைகளைக் கோரும் குரல்கள் மவுனித்து கிடக்கின்றன என இதை எடுத்துக் கொள்வதா?. ஆபத்து நம்மை நெருங்காதவரை நாம் பாதுகாப்பாக இருப்போம் என பதுங்கிக் கொள்வதாக எடுத்துக் கொள்வதா?

பேராபத்தில் ஜனநாயகம்
ஆனால் மாயாவதி சொன்னதைப் போல, ஜனநாயகத்தின் வரலாற்றில் இது ஒரு கறுப்பு அத்தியாயம்.. இதை மவுனங்கள் மூலம் அனுமதித்தால் ஜனநாயகமே கறுத்துப் போய்விடும் என்பதுதான் அதை பாதுகாக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்து.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications