விசாரணையே முடியல அதுக்குள்ள ஜாமீனா'.. ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி!
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனுவை சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விசாரணை முழுமையாக முடிவடையாததால் ஜாமீன் வழங்க முடியாது என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
3 நாள் போலீஸ் காவல் முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ராஜகோபாலன்.

ராஜகோபாலன் கைது
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த வாரம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆன்லைன் வகுப்பில் அரைநிர்வாணமாக வந்து பாடம் எடுத்தது, மாணவிகளிடம் அசிங்கமாக பேசியது என்று ராஜகோபாலன் மீது பல்வேறு மாணவிகள் புகார் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை
பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தியதால் ராஜகோபாலனை ஜூன் 4-,ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ராஜகோபாலனை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனுவை ஏற்ற நீதிமன்றம் மூன்று நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கியது.

ஜாமீன் கோரி மனு
இதனையடுத்து போலீசார் ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து இரவு, பகலாக துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜகோபாலன் சார்பில் தாக்கல் செய்த மனு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் முன்ப இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே ஜாமீன் வழங்க கூடாது' என எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.

நீதிபதி மறுப்பு
ராஜகோபால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது .ஏற்கனவே காவல்துறை தங்களின் காவலில் எடுத்து விசாரித்து விட்டனர். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம்' என்று தெரிவிக்கபட்டது. அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது' என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications