பீதியில் வெளிமாநிலத்தவர்.. பயமா? உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.. அறிவித்த காவல்துறை!
வெளிமாநில தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
சென்னை : பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனவும் சில வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவதூறாக பரப்பப்பட்டு வருகிறது. இது வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். அவர்கள் ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதாக தெரிவித்திருந்த நிலையில் போலீசார், இலவச தொலைபேசி எண்களை அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டு, 0421-22-3313, 9498101300, 9498101320 ஆகிய எண்களை அறிவித்துள்ளனர். உதவி தேவைப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் இந்த ஹெல்ப்லைன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications