நீண்ட போராட்டத்திற்கு பிறகு.. நவம்பர் 6 இல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறை அனுமதி
சென்னை: நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நடத்திக் கொள்ள காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர் எஸ் எஸ் அமைப்பு காவல் துறை அனுமதி கோரியது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் அதாவது ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்ட சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் நிர்வாகிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவியது.

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு
இந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காவல் துறை அனுமதி மறுத்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு நாடியது. இது தொடர்பான மனுவில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என 9 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் அனுமதி
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ் எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சட்டம் ஒழுங்கு காரணமாக போலீஸார் அனுமதி அளிக்க மறுத்தனர்.

6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம்
இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் வரும் நவம்பர் 6 ஆம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல் துறை அனுமதி அளித்துள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி வழங்கிக் கொள்ளலாம் என டிஜிபி சைலேந்திர பாபு காவல் துறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசிக எதிர்ப்பு
இதே போல் அக்.2 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் இந்த அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மற்ற மாநிலத்தில் நடந்த அசம்பாவிதங்களை சுட்டிக் காட்டி மற்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications