தமிழகத்தில் மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; 13 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 674 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 1,00,929 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 5,45,60,671 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்றைய பரிசோதனைகளில் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,35,389 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து 708 பேர் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,91,054.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 36,612.
தமிழகத்தில் சென்னையில் 116 பேருக்கும் கோவையில் 102 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 7723 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications