அரசு பள்ளிகளில் ஜரூர் மாணவர் சேர்க்கை- சொந்த செலவில் இலவச செல்போன் தருவதாக அறிவித்த தலைமை ஆசிரியர்
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் ஶ்ரீவில்லிப்புத்தூரில் சொந்த செலவில் இலவச செல்போன் தருவதாக அறிவித்திருக்கிறார் தலைமை ஆசிரியர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் அச்சத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாடங்களை தமிழக அரசு இணையம் மற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில் ஶ்ரீவில்லிப்புத்தூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தங்களது பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் இலவசமாக செல்போன் வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து பெற்றோர் கூறுகையில், தமிழக அரசு, அரசாங்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பில் உள் இட ஒதுக்கீடு செய்துள்ளது. எங்கள் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவில் அனைத்து வசதிகளும் உள்ளது.

சிறப்பாக பாடம் கற்றுத் தரப்படுகிறது. மேலும் தற்போதுள்ள கொரோனா அச்சம் சூழ்நிலையில், இணையதளம் வாயிலாக பாடம் கற்றுத் தரப்படுகிறது. மொபைல்போன் வாங்க இயலாத நிலையில், தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் மொபைல்போன் வாங்கித் தந்துள்ளார் என்றனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications