சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் 5 நாட்களுக்கு மழை.. பல இடங்களில் வெயில் வறுக்கும்- வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கடுமையான வெப்பம் சுட்டெரித்து வருகிறது. இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உயர்ந்து காணப்படுவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கடும் குளிர், வெயிலை கடந்தாச்சு.. டெல்லியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் கொரோனா கடும் குளிர், வெயிலை கடந்தாச்சு.. டெல்லியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் கொரோனா

இந்த நிலையில்தான் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு மகிழ்ச்சித் தகவலை தெரிவித்து உள்ளது.

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

அதன்படி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வெப்ப நிலை

வெப்ப நிலை

விருதுநகர், மதுரை போன்ற தெற்கு உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதிக பட்ச வெப்பநிலை 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சி

வளிமண்டல சுழற்சி

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை இந்த வளிமண்டல சுழற்சி நிலவுகிறதாம். இதனால்தான் அங்கு மழையும் பிற பகுதிகளில் நல்ல வெயிலும் என கலந்துகட்டி தமிழகத்தில் அடிக்கப்போவதாக கூறுகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.

English summary
Chennai Meteorological Department says there are possibilities for rain in Tamil Nadu for next 5 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X