முறைகேடுகள் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறையில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு
சென்னை: டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்ந்து வெளியாகும் நிலையில் அதன் தேர்வு முறைகளில் 6 முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகள் ஒவ்வொன்றிலும் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது 2016-ம் ஆண்டு வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தேர்வு முறைகளில் 6 முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. இன்று வெளியிட்ட அறிக்கை விவரம்:
1. தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன் இறுதியாகத் தேர்வுபெற்ற நபர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-1 ன் தேர்வின் நடைமுறைகள் முற்றிலுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சியடைந்த 181 தேர்வர்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை (OMR மற்றும் எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள்) இணையதளம் மூலமாக உரிய கட்டணம் செலுத்தி உடனடியாகப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். இம்முறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
3. பல்வேறு பதவிகள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறைவாரியாக, மாவட்ட வாரியாக இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறையும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இனிவருங்காலங்களில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.
மேலும் 4) தேர்வு மையம் ஒதுக்கீடு, 5) ஆதார் கட்டாயம், 6) தொழில் நுட்ப தீர்வு ஆகியவற்றின் கீழும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகளின் மாற்றங்கள் விவரம்:












Click it and Unblock the Notifications