TNPSC தேர்வு குளறுபடி.. நீதி விசாரணை நடத்திட வேண்டும்! சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
சென்னை: நேற்று நடக்க இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள், குளறுபடிகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. திடீரென கடைசி நேரத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெறும் 9,000 பேர் எழுதும் தேர்வுக்கு உங்களால் சரியாக சென்டர் போட முடியாதா? என்று டிஎன்பிஎஸ்சி-க்கு தேர்வர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்த நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "TNPSC குரூப் 2 , 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

இது போதுமான நடவடிக்கை அல்ல; ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள் , முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது. இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ, நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது. TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும். தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இந்த குளறுபடிகள் தொடர்பாக விசாரணை வேண்டும் என்று என்டிஏ கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. ஆனால், தற்போது திமுக கூட்டணியிலிருந்து குளறுபடிகளுக்கு எதிராக குரல் எழுந்திருக்கிறது. இத்தனைக்கும் நேற்று முன்தினம்தான், கார்ல் மார்க்ஸ் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து, இடதுசாரிகளுடனான கூட்டணியை மேலும் வலுப்படுத்தியிருந்தார். இப்படி இருக்கையில், சிபிஎம் தரப்பிலிருந்து குளறுபடிகளை கண்டித்து குரல் எழுந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications