டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் வெளியீடு
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து உள்ளவர்களின் முழு விவரம் டிஎன்பிஎஸ்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார் இதுவரை 35 பேரை கைது செய்துள்ளார்கள். இதில் காவலர் சித்தாண்டி, ஜெயக்குமார், ஐயப்பன், ஓம் காந்தன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகாக பார்க்கப்படுகிறார்கள்.

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரைத் தகுதி நீக்கம் செய்ததுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுதவும் டிஎன்பிஎஸ்சி தடைவிதித்துள்ளது. குரூப் 2 ஏதேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருவதால் விரைவில் அதில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் அதில் 6 முக்கிய சீர்திருத்தங்களை அரசு செய்துள்ளது. இதன்படி டிஎன்பிஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம், தேர்வு நடைமுறைகள் முழுதும் நிறைவடைந்த பின்னர், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பன உள்ளிட்ட சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைகேடுகளைக் களையும் நோக்கிலும் தேர்வு மற்றும் திருத்தம் நேர்மையான முறையில் நடந்ததை உறுதி செய்வதற்காக 2019-ல் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் இருப்பவர்களின் விவரங்கள் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அத்தேர்வில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்களின் பெயர், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, புகைப்படம், தேர்வெழுதிய மையம், அதன் முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications