டிஎன்பிஎஸ்சி குரூப் 1 எக்ஸாம் எழுதுனீங்களா.. முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிற்பகலிலேயே முடிவுகள் வெளியானது. வரும் டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி வரை குரூப் 1 முதன்மை தேர்வானது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வை எழுத தகுதி பெறுவர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 8 வரை தேர்வுகளை நடத்துகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித்தேர்வு வைத்து அதன் மூலமாக டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இதில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் முதலில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும், இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடந்தது. மொத்தம் உள்ள 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிற்பகலிலேயே குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும் டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வில் நேரடியாக கலந்துகொள்கிறார்கள். தேர்வு நடைபெற்ற 50 நாட்களுக்குள்ளாகவே குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்கள்:
துணை ஆட்சியர் - 16 இடங்கள்
துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) - 23,
வணிகவரித்துறை உதவி ஆணையர் - 14
கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21
ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி - 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications