டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஆன்சர் கீ வெளியீடு - உங்க ரிசல்ட் எப்படி? உடனே செக் பண்ணுங்க
குரூப் 2, 2ஏ தேர்வுகளின் தற்காலிக ஆன்சர் கீ www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, 2ஏ தேர்வுகளின் தற்காலிக ஆன்சர் கீ www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் அதாவது 84.44 விழுக்காடு பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த தேர்வில் தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட்
இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்சர் கீ வெளியீடு
தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன், குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல. தேர்வுக்கான தற்காலிக ஆன்சர் கீ விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இணைய தளத்தில் செக் பண்ணலாம்
இந்நிலையில் தேர்வின் தற்காலிக / உத்தேச விடைத்தாள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தற்காலிக ஆன்சர் கீ http://www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in சென்று ஆன்சர் கீ லிங்கை கிளிக் செய்யவும். உங்கள் விவரங்களை உள்ளிடவும். TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் ஆன்சர் கீ 2022 ஐ டவுன்லோட் செய்யவும்.

விடைகளில் ஆட்சேபணை
அரசு வெளியிட்டுள்ள இந்த தேர்வு முடிவுகளில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், ஒருவார காலத்துக்குள் இணைய வழியில் மட்டும் பதிவு செய்யலாம். மூன்று தேர்வுகளுக்குமான விடை மற்றும் ஆட்சேபனை தெரிவிக்கும் பொது லிங்க் - https://www.tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=9ebe752b-d3ed-4b6f-b9ba-02708064637c
விடைகளில் ஆட்சேபனைகள் இருந்தால், ஜூன் 3-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஜூன் 3ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.

ஜூலை 24ல் குரூப் 4 தேர்வு
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பாட புத்தகங்களை மட்டுமே மேற்கோளாக காண்பிக்க வேண்டும். ஆட்சேபனைகள் குறித்து வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்து அறிவிக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications