Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TNPSC Group 2: இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள்! ரூல்ஸ் என்ன! எதற்கெல்லாம் அனுமதி இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் க்ரூப் 2, க்ரூப் 2 ஏ தேர்வுகள் இன்று நடக்கிறது. இந்தத் தேர்வை 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். 2,327 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வுகள் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி இந்தத் தேர்வு நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு அரசுப் பணிகள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்பட்டு வருகிறது. இதற்காக க்ரூப் 1 முதல் பல்வேறு தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது.

tnpsc tamil nadu

இதற்கிடையே டிஎன்பிஎஸ்சி க்ரூப் 2 தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்வை மாநிலம் முழுக்க 7.94 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேர்வு சுமூகமாக நடந்து வருகிறது.

க்ரூப் 2 தேர்வு: முன்னதாக இது குறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 08/2024, நாள்: 20.06.2024 இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு நடைபெறவுள்ளது.

இத்தேர்வினை 7,93,966 விண்ணப்பதாரர்கள், த ிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். தேர்வினை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான மந்தண பொருட்கள் உரிய முறையில் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

ரூல்ஸ் என்ன: தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் Video graph செய்ய உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tnpsc tamil nadu

காலை 9 மணிக்கு: 09.00 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர் ள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் நுழைய அனுமதிக்கப் பட மாட்டார்கள். மேலும், இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை கட்டாயம் தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக வேறெந்த ஆவணமும் அனுமதிக்கப்படாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாகப் பின்பற்றுமாறும், அதில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+