டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வில்.. கேட்கப்பட்ட கே.பாலசந்தர் பட பாணி கேள்வி! விடை என்ன தெரியுமா?
சென்னை: இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கே பாலசந்தர் படப் பாணியில் கேட்கப்பட்ட கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. அது என்ன கேள்வி.. அதன் பதில் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளை டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்பி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும்.

டிஎன்பிஎஸ்சி காலியிடங்களைப் பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல வகையான தேர்வுகள் நடத்தும். மாநிலம் முழுக்க பல லட்சம் இளைஞர்கள் இதற்காகவே தயாராகி வருகிறார்கள்.
க்ரூப் 4: இந்தாண்டு க்ரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கப் பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் விஏஓ, வனக் காவலர், விஏஓ, பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 6,244 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரசுப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்தனர். சுமார் 20 லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 4 தேர்வைப் பொறுத்தவரை இதை எழுத 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்.. மேலும், நேர்முகத் தேர்வு இல்லை. எழுத்துத் தேர்வில் கட் ஆப் மார்க் அடிப்படையில் வேலை வழங்கப்படும். இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் க்ரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள்..
இன்று தேர்வு: இந்தாண்டு டிகிரி, என்ஜினியரிங் படித்தவர்கள் உட்பட மொத்தம் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2 வாரங்களுக்கு முன்பு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்ட நிலையில், இன்று குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது.. காலை 9.30 மணிக்குத் தொடங்கிய க்ரூப் 4 தேர்வு 3 மணி நேரம் நடைபெறும் நடைபெற்றது.
இதில் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதற்கிடையே க்ரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இணையத்தில் பரவும் கேள்வி: ரமீலா கூறுகையில், "எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை".. ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமாதனுக்கு என்ன உறவு? என்பதே அந்த கேள்வியாகும். அதற்கு 5 ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.. மனைவி, சகோதரி, மகள், பேத்தி மற்றும் விடை தெரியவில்லை என்று 5 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கேள்வி தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்பது குறித்து நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லி வருகிறார்கள். இதற்கு என்ன பதில் என உங்களுக்குத் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள்..
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications