டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு.. நேர்முகத்தேர்வு 23ம் தேதி தொடக்கம்
சென்னை: துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி, வணிக வரித்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதவிளர், தீயணைப்பு மீட்பு அலுவலர் உள்பட 181 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று வெளியானது. நேர்முகத்தேர்வு வரும் 23ம் தேதி தொடங்குகிறது.
முன்னதாக தமிழகத்தில் காலியாக இருந்த 181 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி நடந்தது. இந்ததேர்வை எழுதிய 2 லட்சத்து 29 ஆயிரம் பேரில் 9442 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜுலை 12, 13, 14ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று முதன்மை தேர்வுக்கான ரிசல்ட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் http://www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 363 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 117 பேர் சங்கர் ஐஏஎஸ் அகடாமியில் படித்தவர் என்று அதன் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி தேவி கூறினார்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு வரும் 23ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 30ம் தேதி நேர்காணல் நிறைவு பெறுகிறது. இதில் 25 மற்றும் 29ம் தேதிநீங்களாக நேர்முகத்தேர்வு நடக்கிறது