ஒரே நாள்ல 2 அரசு தேர்வுகள்.. எதுக்கு செல்வது?.. மண்டையை பிய்த்துக்கொள்ளும் தேர்வாளர்கள்
சென்னை:தமிழக அரசு நடத்தும் தேர்வும், மத்திய அரசு அறிவித்துள்ள போட்டி தேர்வும் ஒரே நாளில் நடத்தப்படுவதால் எதை எழுதுவது என்று தெரியாமல் தேர்வாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. அதில் தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக உடற்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்த்தல் போன்றவற்றுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வரும் 21-ம் தேதி சென்னையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அந்த பணிகள் நடைபெறவுள்ளது. அதேபோன்று, மத்திய அரசின் ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் உதவி லோகோ பைலட் பதவிக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
அதில் தேர்வானவர்களுக்கு அடுத்து இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வும் அதே ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 2 தேர்வுகளிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் தேர்வு பெற்று, 2-ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால், 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்படுவதால் எதில் பங்கேற்பது என்ற குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள போட்டி தேர்வாளர்கள், 2 தேர்வுகளில் முதல்நிலையை கடந்து அடுத்த கட்ட தேர்வுக்கு பலர் தகுதி பெற்றுள்ளனர்.
ஆனால் 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஏதேனும் ஒரு தேர்வு தேதியை தள்ளி வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications