டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு நடத்தப்பட்ட குருப் 2 ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் பலர் தேர்வாகினர்.

இது குறித்த சிபிசிஐடி விசாரணையில் தேர்வு முறைகேடுகளில் ஈடுப்பட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சென்னையை சேர்ந்த பூர்ணிமாதேவி , வேலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற இடைதரகர் நாரயாணனுக்கு என்பவருக்கு 21 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி 3 பேர் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிசிஐடி தரப்பில், விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு ஊழியர்களான பூர்ணிமா தேவி, விக்னேஷ் மற்றும் இடைத்தரகர் நாராயணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications