தோடர், நரிக்குறவர்.. பழங்குடியின மக்களின் மொழி வளங்களை பாதுகாக்க ரூ. 2 கோடி! பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை: சௌராஷ்ட்ரா, வடுகு மொழிகளையும் தோடர், நரிக்குறவர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடத்தும் வகையில் இனவரைவியல் - ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது ஆற்றிய உரையில், "இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. 100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது என்று கூறினார்.
மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது மத்திய அரசு என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு இதுவரை திமுக அரசின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி முதல் தற்போதைய மு.க.ஸ்டாலின் ஆட்சி வரையில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து பட்டியலிட்டார்.
நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்புகளை வெளியிட்ட தங்கம் தென்னரசு, சௌராஷ்ட்ரா, வடுகு மொழிகளையும் தோடர், நரிக்குறவர் உட்பட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடத்தும் வகையில் இனவரைவியல் - ஆவணப்படுத்தி பாதுகாக்க தமிழ்நாடு அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications