தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா,.. ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா.. 53 பேர் மரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, முதல் முறையாக இன்று ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 5ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377ஆக உயரந்துள்ளது.

தமிழகத்தில் வழக்கம் போல் கொரோனாவால் சென்னையைச் சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று கொரோனாவால் 1493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் தமிழகத்தின் பிற பகுதிகளில் 1039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

40 சதவீதம் தமிழகம்

40 சதவீதம் தமிழகம்

அதாவது சுமார் 60 சதவீத்ம் பாதிப்பு சென்னையிலும் 40 சதவீத பாதிப்பு தமிழகத்தின் இதர பகுதிகளிலும் உள்ளது. முன்பு சென்னையில் 80 சதவீதமும் பிற பகுதிகளில் 20 சதவீதம் என்ற அளவில் பாதிப்பு இருந்தது. ஆனால் அது சென்னையில் 60 சதவீதம் ஆகவும் பிறபகுதிகளில் 40 சதவீதம் ஆகவும் மாறி உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு சென்னை தவிரி பிற பகுதிகளில பரவலாக தமிழகத்தில் அதிகரித்திருப்பது உறுதியாகி உள்ளது.

32 ஆயிரம் பேர் குணம்

32 ஆயிரம் பேர் குணம்

தமிழகத்தில் இன்று மட்டும் 1438 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 21ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 32,754 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 25,863 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 17683 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

30 ஆயிரம் பரிசோதனை

30 ஆயிரம் பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,401 சாம்பிள்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 8,92,612 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 29,963 பேருக்கு இன்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக 8,51,557 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் .13 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 49400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதை கடந்த 7043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட 2934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகம்

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 53 பேரில் 16 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்த 53 பேரில் பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+