Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென எழுப்பிவிட்ட சபாநாயகர்.. நயினார் நாகேந்திரன் செம ஷாக்! “என்னை விட்ருங்க” கடைசியில் ஒரே போடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அறிவிப்புக்கு நன்றி கூற பாஜகவின் நயினார் நாகேந்திரனை சபாநாயகர் அப்பாவு அழைக்க, அவர் திகைத்துப்போய் தயங்கினார். இதையடுத்து எழுந்து பேசிய அவர் பெரியார் - வைக்கம் என்ற வார்த்தைகளையே குறிப்பிடாததோடு ஸ்ரீராமநவமி எனத் தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.

வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை, தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனை பேச அழைத்தார் சபாநாயகர் அப்பாவு.

முதலில் பேச மறுத்த நயினார் நாகேந்திரன் பின்னர், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பற்றி எதுவும் சொல்லாமல் ராம நவமியை நினைவூட்டி பேசினார்.

110 விதியின் கீழ் அறிவிப்பு

110 விதியின் கீழ் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பெரியார் நடத்திய சமூகநீதி போராட்டங்களில் வைக்கம் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்களும், மாணவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் ஓராண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும், கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் நானும் பங்கேற்கிறேன் என்று அறிவித்தார்.

என்னை விட்ருங்க

என்னை விட்ருங்க

இதையடுத்து ஒவ்வொரு கட்சியை சார்ந்த சட்டமன்ற கட்சி தலைவர்களும் அவரவர் கட்சி சார்பில் இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசி அமர்ந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன், முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துவிட்டு அமர்ந்த நிலையில், அடுத்ததாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனை பேச எழுப்பினார் சபாநாயகர் அப்பாவு. உடனே தயங்கிய நயினார் நாகேந்திரன், என்னை விட்ருங்க.. அடுத்து பாமகவின் ஜிகே மணியை பேசச் சொல்லுங்க என சிரித்தபடி சைகை காட்டினார்.

விடாத அப்பாவு

விடாத அப்பாவு

பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் பெரியார் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்த அறிவித்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கத் தயங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு விடாமல், "ஒரு நன்றி தானே சொல்லணும்.. எதிர்த்துப் பேச முடியாது. நன்றி தான் சொல்ல முடியும். சொல்லிட்டு உட்காருங்க" என்றார். இதையடுத்து, சபாநாயகர் பேச்சை தட்ட முடியாமல் எழுந்தார் நயினார் நாகேந்திரன்.

ஸ்ரீராமநவமி

ஸ்ரீராமநவமி

பாஜகவின் நயினார் நாகேந்திரன் சிரித்தபடியே எழுந்து, "முதலமைச்சர் கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் அவர் ஏற்பாடு செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வாழ்த்துகள். அதே போல இன்று ஸ்ரீராமநவமி - ராமர் பிறந்த தினம் என்பதையும் இந்த நேரத்திலே பதிவு செய்து அமர்கிறேன்.. நன்றி வணக்கம்" எனப் பேசிவிட்டு அமர்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+