சென்னையில் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு.. காவல் ஆணையர்
சென்னை: சென்னையில் நாளை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் வரும் 30-ஆம் தேதி வரை 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின்போது வரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 வரை கால அவகாசம்
நாளை ஜிப்மர் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான ஹால்டிக்கெட்டை காட்டினால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆணையர் தெரிவித்தார். சென்னையில் 6,421 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 2,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.