இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 06/03/2026: மோடி டூ ஸ்டாலின் வரை பேசியவை என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி குறித்தும், மாநிலங்களவைத் தேர்தல் குறித்தும் பலர் பேசியிருக்கிறார்கள். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பிரதமர் மோடி
இயற்கை விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும். வேதியியல் இல்லாத விவசாயத்தை செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான Stalin Statement-ஐ இன்று அறிவிக்க இருக்கிறேன். அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாளில் இதை அறிவிக்கிறேன்.
சீமான்
ஓட்டுக்களை விலை கொடுத்து வருகிறார்கள். காசு கொடுத்து பெறும் வெற்றி இழிவானது. ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு பணநாயகம் வந்துவிட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என கேட்கும் நிலை வந்துவிட்டது.
டிடிவி தினகரன்
வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டத்தால் ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட அரசு சேவைகள் முடங்கும் அபாயம்.
செல்வப்பெருந்தகை
அதிமுகவை கபளீகரம் செய்வதற்கான திட்டங்களை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
டிஆர்பி ராஜா
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 36 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
செஞ்சி மஸ்தான்
பெண்கள் எல்லாம் ஸ்டாலினுக்கு வாக்களிக்கப் போவது உறுதியானதால் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள்.
திருமாவளவன்
முன் விரோதம் இல்லாமல் கொலை நடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.. காரணத்தை கண்டறிய வேண்டும்... போதை காரணமா? அரசியல் காரணமா என்பதை கண்டறிய வேண்டும்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
உழைப்பவர்கள் பொறுமையாக கடினமாக உழைத்தால் இந்த இயக்கம் கண்டிப்பாக அவர்களை அங்கீகரிக்கும் என என் மூலம் தொண்டர்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறது. அண்ணா, முரசொலி மாறன், வைகோ, சிவா போன்றோர் போன பாதையில் நானும் திமுகவின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்துரைப்பேன்.












Click it and Unblock the Notifications