இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ளது. தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, சீமான் உள்ளிட்ட டாப் 10 தலைவர்கள் கூறிய பல்வேறு கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

ஸ்டாலின்
திருச்சி தயாராக இருக்கிறது. மாலையில் சந்திப்போம்.
எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் ஆட்சியில் எங்கும் கொலை, எதிலும் கொலை என வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பதை பிறகு சொல்கிறோம். இப்போது தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. இதற்கு பிறகுதான் தெரியும்.
ஆதவ் அர்ஜுனா
தான் அரசியலுக்கு வருவது தனது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என விஜய் தெரிவித்தார்.
ரஞ்சனா நாச்சியார்
25 ஆண்டுகாலம் கூட வாழ்ந்த மனைவிக்கு விஜயை பார்க்க அனுமதியில்லை.. அவங்க அம்மா, அப்பாவால கூட பார்க்க முடியல.. எதற்காக இந்த மர்ம வாழ்கை..? - த.வெ.க.வின் ரஞ்சனா நாச்சியார் அடுக்கடுக்கான கேள்வி
கே.பி.ராமலிங்கம்
பாஜக தொண்டர்கள் நலனில் நயினார் நாகேந்திரன் அக்கறை காட்டுவதில்லை.
சவுமியா அன்புமணி
பெண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும் அதே ஒழுக்கத்தை, கட்டுப்பாடுகளை ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.
எல்.முருகன்
திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும்.
கிரிஷ் சோடங்கர்
படியில் இறங்கும்போது கால் இடறி சுளுக்கு ஏற்பட்டு வலியால் மயங்கினேன்.. சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருக்கிறேன்.
சீமான்
"நான் வீரன்.. தனியா தானே சண்டைக்கு போவேன்.. மச்சான் நீ வான்னு கூப்பிட்டா பயப்படுறன்னு தான அர்த்தம்.."












Click it and Unblock the Notifications