டாப் ஹீரோக்களுக்கு சம்பளம் கிடையாது? வருவாயில் பங்கு! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி
சென்னை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற சினிமா தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் வியாபார பங்கீட்டு முறையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும், வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் அனைத்து தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக நடிகர் ராதா ரவி, எஸ்.வி சேகர், செந்தில், தேவயானி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

பொதுக்குழு தொடங்கியதும் 2022 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதேபோன்று வாக்களிக்க தகுதியுள்ள நிரந்தர உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் 2026-2029 தேர்தலுக்கான அறிவிப்புக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பொதுக்குழுவில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திரைப்படங்களில் நடித்துக்கொண்டு ஓடிடி வெப் சீரிஸ்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரஜினி, அஜித், தனுஷ், சிம்பு, விஷால் போன்ற முன்னணி நடிகர்கள் பலரும் வியாபார பங்கீட்டு முறையில் நடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏனென்றால், இவர்கள் அதிகப்பட்ச ஊதியம் வாங்குவதால் இனிமேல் வியாபார பங்கீட்டு (Share Basic) முறையில் மட்டுமே நடிக்க வேண்டும். படங்களில் நடிக்கும் போது சில நடிகர்கள் ஓடிடி வெப் சீரியஸ்களில் நடிப்பதால், திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் பாதிக்கப்படுகிறது எனவும், இதனாலேயே மேற்கண்ட கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இனி முன்னணி நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல், லாபத்தின் அடிப்படையில் வரும் பணத்தினை வைத்து நடிகர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால் அது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், படத்தினால் லாபம் கிடைத்தால் அது நடிகருக்கும் பயனளிக்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications