“சீமானை எங்குமே நுழைய விடமாட்டோம்”.. பெரியார் குறித்து பேசிய சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிக
சென்னை: தந்தை பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் இன்று சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றனர். சீமானை எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம் என தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தந்தை பெரியாரை பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அவதூறான கருத்தை பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறித்திருந்தது.

அதன்படி தபெதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை நோக்கிச் சென்றனர். சீமான் வீட்டுக்கு செல்லும் பாதையில் 200 மீட்டருக்கு முன்பு பேரிகார்டுகள் அமைத்து போலீசாரால் தபெதிகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சீமானுக்கு எதிராக தபெதிக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் முழக்கம் எழுப்பினர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட வந்த தபெதிக-வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அருகில் உள்ள சமூதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், "தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சீமான், பெரியாரை பற்றியும், பெண்களை இழிவுபடுத்தியும் சீமான் பேசி இருக்கிறார். அவரது பேச்சு எந்தவித ஆதாரமும் அற்றது. அவர் ஒரு கீழ்த்தரமான செய்தியை பெரியார் சொன்னதாக சொல்கிறார். அதற்கு அவர் ஆதாரம் தரவேண்டும்.
பெரியாருக்கு, பெரியார் என பெயர் சூட்டியது பெண்கள். உலகம் முழுவதும் உள்ள பெண்ணிய தத்துவவாதிகள் சொல்லாதவற்றையும் கூட பேசியவர் போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரை இழிவு செய்திருக்கிறார். சங் பரிவார் கும்பல் தான் இப்படிப்பட்ட தவறான பிரச்சாரத்தை செய்து வந்தது. அந்தப் பிரச்சாரத்தை நம்பி இப்படி பேசி இன்று தமிழ்நாட்டு மக்களிடத்தில் வசமாக சிக்கி இருக்கிறார் சீமான்.
கடந்த காலங்களில் சங் பரிவார் கும்பல்கள் இதே கருத்தைப் பேசினார்கள். பெரியார் சொன்னதாக விடுதலை நாளேட்டை ஆதாரமாகச் சொன்னார்கள். ஆனால், அதே தேதியிட்ட விடுதலை நாளேட்டையே எடுத்துப் போட்டு அந்த பிரச்சாரத்தை முறியடித்தோம். தொடர்ந்து அவதூறான செய்தியை பரப்பி வரும் சீமான் இனி எந்த இடத்திலும் நுழைய விட மாட்டோம்" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தின்போது நாதக நிர்வாகியின் கார் கண்ணாடியை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உடைத்ததாக புகார் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications