'லீவு' விட்ட மழை.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. சென்ட்ரல், எழும்பூரில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: தமிழகத்தில் கனமழை பிரித்து மேய்ந்து வரும் நிலையில், சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.
மழையால் தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால், சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
இதேபோல, கோயம்பேடு, பெருங்களத்தூர், போரூர் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அடித்து நொறுக்கும் மழை..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம், புதுவையில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த சூழலில், வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவாகியது. வழக்கமான பருவமழையுடன், காற்றழுத்த தாழ்வு நிலையும் சேர்ந்து கொண்டதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட தமிழக மாவட்டங்களில் நேற்று காலை முதலாக தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

தொடர் விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிறையும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் விடுமுறை ஆகிவிடுகிறது. இதனால் மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.

சொந்த ஊர் - படையெடுக்கும் மக்கள்
ஒருநாள் விடுமுறை என்றாலே நம் மக்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் விட மாட்டார்கள். இதில் 3 நாள் விடுமுறை என்றால் கேட்கவா வேண்டும். பெட்டி, படுக்கைளை எடுத்துக் கொண்டு சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ஜூட் விட ஆரம்பித்துள்ளனர். கார் வைத்திருப்பவர்கள் தங்கள் கார்களிலேயே ஊருக்கு புறப்பட்டுள்ளனர். மற்றவர்கள், ரயில், பஸ்களில் சொந்த ஊருக்கு முண்டியடித்து செல்வதை பார்க்க முடிகிறது.

பயங்கர போக்குவரத்து நெரிசல்
இந்நிலையில், கனமழையையும் பொருட்படுத்தாமல் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருவதால் அங்குள்ள சாலைகளிலும் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல, ரயில் கிடைக்காதவர்கள் பஸ்களை நோக்கி படையெடுப்பதால் கோயம்பேடு, போரூர், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. இதனால், மழைக்காலத்தில் வெறிச்சோடி காணப்படும் சென்னையின் முக்கிய சாலைகளில், இன்றைக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications