தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு.! ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்
சென்னை: 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, அடுத்த வாரம் சனிக்கிழமையன்று தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை என்றாலே நம் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். பெரியவர் முதல் சிறியவர்கள் வரை தீபாவளி திருநாளை எதிர்பார்க்காதவர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தீபாவளி திருநாள் நடப்பாண்டு அக்டோபர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் பணி, தொழில், வியாபாரம், படிப்பு போன்ற காரணங்கள் நிமித்தமாக தலைநகர் சென்னை உட்பட கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்கள், தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்ல தற்போதிலிருந்தே மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் தீபாவளிக்காக ஒரே நேரத்தில் சொந்த ஊர் செல்வது வழக்கம். பேருந்துகள், ரயில்கள் என அனைத்திலும் மக்கள் வெள்ளமே காணப்படும்.
இச்சூழலில் தீபாவளிக்காக ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 29ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வோர், 120 நாட்களுக்கு முன்னதாக தான் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் அக்டோபர் 27-ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29-ம் தேதியும், அக்டோபர் 26-ம் தேதி ரயிலில் பயணிக்க வரும் ஜூன் 30-ம் தேதியும், அக்டோபர் 25-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய ஜூலை 1ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக ரயில்களில் ஊருக்கு செல்ல விரும்புவோர் தெற்கு ரயில்வே இணையதளத்தில் ஜூன் 29 காலை 8 மணிக்கு டிக்கெட் முன் பதிவு செய்யலாம்
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications