முடிவுக்கு வந்த கோடை விடுமுறை.. ஊர் திரும்ப முந்தும் பயணிகள்.. போக்குவரத்து கழகம் சூப்பர் திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 5ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை தொடங்கியது. இதனையடுத்து மக்கள் குடும்பங்களுடன் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது பள்ளி ஜூன் 6ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, மக்கள் மீண்டும் சென்னை மற்றும் பெருநகரங்களை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பேருந்து பயன்பாடு அதிகரிக்கும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்திருக்கிறது. எனவே, இந்த நெருக்கடியை சமாளிக்க கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை மற்றும் நெல்லை என 6 மண்டலங்களிலிருந்தும், இது தவிர, விரைவு போக்குவரத்து மற்றும் மாநகர போக்குவரத்து என 8 மண்டலங்களில் 20,258 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜூன் 6ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை முடிவடைகிறது. எனவே மக்கள் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்ப பேருந்துகளை முன்பதிவு செய்திருக்கின்றனர். இயல்பாகவே இந்த காலத்தில் பேருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும்.
எனவே இதனை சமாளிக்க போக்குவரத்து கழகம் வசம் இருக்கும் அனைத்து பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதன் மூலம் மக்கள் நெரிசல் குறைக்கப்படும். அதேபோல சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு போதுமான அளவில் பேருந்துகள் இயக்கப்படும். ஏற்கனவே பணி நிலையங்களில் இருந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு தயாராக இருக்கிறது. இந்த நெருக்கடியை நாங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் எதிர்கொள்வோம்.
பெரும்பாலான பயணிகள் இரவு நேரத்தில் பயணம் செய்வதால் அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம். நெரிசலை சமாளிக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது வழக்கமாக இயக்கப்படும் 20,258 பேருந்துகளை விட கூடுதலாக 500 பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர். போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications