Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருது வருது.. திருச்சிக்கு மெட்ரோ ரயில்! அப்போ சேலம், நெல்லைக்கு? சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 45 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு, மெட்ரோ ரயில் சேவை திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னையில் 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

Trichy, Nellai, Salem metro train service: Feasibility study report submitted

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தப்பட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய ஊர்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று சமர்ப்பித்துள்ளது. அதில் திருச்சியில் 26 கி.மீ தொலைவுக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீ தொலைவுக்கு ஒரு கட்டமாகவும் என 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trichy, Nellai, Salem metro train service: Feasibility study report submitted

திருநெல்வேலியைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் திருநெல்வேலியில் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என்றும், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ சமர்ப்பித்துள்ள இந்த ஆய்வறிக்கை குறித்து அரசு பரிசீலிக்கும். பரிசீலனைக்குப் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை அரசு வழங்கும். அதன் பின்னர் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+