Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர்.. மோடியை புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி ரயில் நிலைய நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயரிடப்பட்டிருந்த சம்பவம், விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த விஷயத்தில் மோடியை புகழ்ந்து எடப்பாடி அறிக்கை விட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

சமீப காலமாக ரயில் நிலையங்களில், இந்தியை முதன்மைப்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில், திருச்சி ரயில் நிலையத்தின் வளாகத்தில் உள்ள வரவேற்பு வளைவில், தமிழ், இந்தி என மூன்று மொழிகளில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

Trichy Railway Hindi Name Controversy

பிரச்சனை என்னவெனில், தமிழ் தெரிந்தவர்களுக்கும் அந்த எழுத்தின் அர்த்தம் புரியவில்லை. 'கர்தவ்ய த்வார்' என்று தமிழிலும், இந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த மக்கள் என்னவென்று புரியாமல் தவித்தனர். இதனையடுத்து அரசியல் தலைவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது x பக்கத்தில் பகிர்ந்த அறிக்கை கவனம் பெற்றிருக்கிறது. அதில், "புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பிரதமரை பாராட்டும் தொணியில் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+