Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஜாலியாக பேசினேன்.. திரிஷாவை மதிக்கிறேன்.. விசாரணைக்கு ஆஜர் ஆனபின் மன்சூர் அலிகான் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார். திரிஷா குறித்து உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் போலீஸ் விசாரணையின் போது கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து நடிகை திரிஷா தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் கூறுகையில், மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன்.

 Trisha Misunderstands My speech Not speaking Personally about her, says Actor Mansoor Ali Khan

அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

வழக்கு பதிவு: மன்சூர் அலிகான் த்ரிஷாவுடன் சேர்த்து குஷ்புவையும் பேசியிருந்தார். இது தொடர்பாக கூறியிருந்த குஷ்பு, மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனது சீனியரிடம் பேசியுள்ளேன். அவரை சும்மா விடக் கூடாது என போட்டிருந்தார். இந்த நிலையில் இதனிடையே நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி மன்சூர் அலிகான் விளக்கம் அளிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜீவால் அறிவுறுத்தியிருந்தார்.

மனுவை திரும்பப் பெறுவதாக: இந்த வழக்கில் மன்சூர் அலிகான் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எதற்காக தாக்கல் செய்து விட்டு, திரும்ப பெறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர்.

அப்போது, எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என குறிப்பிடுவதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்த்துள்ளதால் மனுவை திரும்பப் பெறுவதாக கூறப்பட்டது. இதனால், நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் இல்லை எனக்கூறி மனுவை வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்தார்.

ஜாலியாக பேசினேன்: இதற்கிடையே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜர் ஆனார். மன்சூர் அலிகானிடம் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, வீடியோவில் பேசியது நான் தான், ஜாலியாகவே பேட்டி கொடுத்தேன். நான் ஜாலியாக பேசியதை திரிஷா தவறாக புரிந்து கொண்டார்.

எந்த உள்நோக்கத்துடனும் திரிஷா குறித்து நான் அவ்வாறு பேசவில்லை. என் பேச்சால் திரிஷா வருத்தம் அடைந்தால் அதற்காக நானும் வருந்துகிறேன்" என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மன்சூர் அலிகான், தனிப்பட்ட முறையில் நடிகை திரிஷவை பற்றி பேசவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+