உண்மை உப்புக்கல்! பொய் விற்கக்கூடாத ரத்தினக்கல்! கவிஞர் வைரமுத்து கவிதை
சென்னை: ஒவ்வொரு மனிதனும் எதை செலவழிக்க வேண்டும். எதை செலவழிக்க கூடாது என்பது குறித்தும், உண்மை என்பது அன்றாட உப்புக்கல்,
பொய் என்பது விற்கக்கூடாத ரத்தினக்கல் என கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் உண்மை, பொய்க்கு இடையேயான வித்தியாசத்தை கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன்னணி கவிஞர், பாடலாசிரியராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் சமூகத்தில் நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து தனது டுவிட்டரில் கவிதை நடையில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் போர் வேண்டாம் என்று வைரமுத்து கவிதை வெளியிட்டு இருந்தார். அதேபோல் கைகளும் கால்களும் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதை அறிவது எப்படி என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு கவிதை நடையில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் உண்மை, பொய்க்கு இடையேயான வேறுபாட்டை கூறி செலவழிக்க கூடியது எது, செலவழிக்க கூடாதது எது என்பது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். நெற்றித்தீ எனும்ஹேஷ்டேக்கில் இடம்பெற்றுள்ள அவரது பதிவு வருமாறு:
செலவழிக்கக் கூடியது
உண்மை
செலவழிக்கக் கூடாதது
பொய்
பொய்யென்ற செல்வத்தைச்செலவழிக்கிறவன்
ஏழையாகிறான்
மற்றும்
இறக்கத் தொடங்குகிறான்
உண்மை
அன்றாட உப்புக்கல்
பொய்
விற்கக்கூடாத ரத்தினக்கல்
#நெற்றித்தீ
என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications