Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உண்மை உப்புக்கல்! பொய் விற்கக்கூடாத ரத்தினக்கல்! கவிஞர் வைரமுத்து கவிதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒவ்வொரு மனிதனும் எதை செலவழிக்க வேண்டும். எதை செலவழிக்க கூடாது என்பது குறித்தும், உண்மை என்பது அன்றாட உப்புக்கல்,
பொய் என்பது விற்கக்கூடாத ரத்தினக்கல் என கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் உண்மை, பொய்க்கு இடையேயான வித்தியாசத்தை கூறியுள்ளார்.

தமிழகத்தில் முன்னணி கவிஞர், பாடலாசிரியராக இருப்பவர் வைரமுத்து. இவருக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா, உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

Truth is a salt, Lying is an unsold gem, says Vairamuthu on his tweet

இவர் சமூகத்தில் நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனித்து தனது டுவிட்டரில் கவிதை நடையில் கருத்து தெரிவித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் போர் வேண்டாம் என்று வைரமுத்து கவிதை வெளியிட்டு இருந்தார். அதேபோல் கைகளும் கால்களும் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதை அறிவது எப்படி என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு கவிதை நடையில் அவர் கூறியிருந்தார்.

Truth is a salt, Lying is an unsold gem, says Vairamuthu on his tweet

இந்நிலையில் தான் உண்மை, பொய்க்கு இடையேயான வேறுபாட்டை கூறி செலவழிக்க கூடியது எது, செலவழிக்க கூடாதது எது என்பது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை நடையில் எழுதி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். நெற்றித்தீ எனும்ஹேஷ்டேக்கில் இடம்பெற்றுள்ள அவரது பதிவு வருமாறு:

செலவழிக்கக் கூடியது
உண்மை
செலவழிக்கக் கூடாதது
பொய்

பொய்யென்ற செல்வத்தைச்செலவழிக்கிறவன்

ஏழையாகிறான்
மற்றும்
இறக்கத் தொடங்குகிறான்

உண்மை
அன்றாட உப்புக்கல்

பொய்
விற்கக்கூடாத ரத்தினக்கல்

#நெற்றித்தீ

என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+