"ஒரே மேடையில் ஓபிஎஸ்- டிடிவி தினகரன்.." கொடநாடு சம்பவம்.. தேனியில் மாபெரும் ஆர்பாரட்டம்
சென்னை: கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்யக் கோரி டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து தேனியில் மிக பெரிய ஆர்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தவர் ஜெயலலிதா.. இவர் அவ்வப்போது நீலகிரியில் அமைந்துள்ள கொடநாடு பங்களாவுக்கு சென்று ஓய்வெடுப்பார். அவருக்குச் சொந்தமான பங்களா அங்கே இருந்தது.

முதல்வராக இருந்த போதும், எதிர்க்கட்சியில் இருக்கும் போதும் இங்குள்ள தனது பங்களாவில் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் கடந்த 2016இல் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு யாரும் அங்குப் பெரிதாகச் செல்லவில்லை.
இந்தச் சூழலில் கடந்த 2017இல் அங்கே கொடநாடு பங்களாவில் மோசமான சம்பவங்கள் நடந்தன. அப்போது அங்கே காவலாளியாக பணிபுரிந்த ஓம் பகதூர் என்பவர் முதலில் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும், பங்களாவில் இருந்த பல முக்கிய பொருட்களும் கூட கொள்ளையடிக்கப்பட்டது.. இந்தச் சம்பவம் அப்போது மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வருக்குச் சொந்தமான இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் என மொத்தம் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. அதன் பின்னர் அங்குப் பல மர்ம சம்பவங்கள் நடந்தன. இதில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதற்கிடையே கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து ஆர்பாட்டம் நடத்தினர். தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக கலந்து கொண்டனர்.
அதேபோல அனைத்து மாவட்டங்களிலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications