‛‛பன்மடங்கு உயர்ந்த முத்திரை கட்டணம்’’.. உடனே திரும்ப பெற வேண்டும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்
சென்னை: ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இதற்கான அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இதற்கான திருத்தங்கள் கடந்த மே 3 முதல் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"தத்தெடுத்தலுக்கு முத்திரைக் கட்டணமானது ரூ.100லிருந்து ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்து ஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொருபாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப் பிரிவினை செய்யும்போது, அதில்ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்" என தெரவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர பல்வேறு முத்திரை கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கட்டண உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "பொதுமக்களை பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
பத்திரப்பதிவுத்துறையின் மூலம் நடைபெறும் பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம், உடன்படிக்கை என அனைத்துவிதமான செயல்பாடுகளுக்குமான முத்திரைக் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியிருக்கும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பால்விலை உயர்வில் தொடங்கி மின்சாரக் கட்டணம், சொத்துவரி, சாலைவரி, குடிநீர் வரி மற்றும் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பை நேரடியாகவும், மறைமுகமாவும் உயர்த்திய திமுக அரசு, தற்போது முத்திரைக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் நிதி மேலாண்மையை முறைப்படுத்துவதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், வரி மற்றும் கட்டண உயர்வு எனும் பெயரில் ஏழை, எளிய மக்களின் மீது கூடுதல் சுமைகளை ஏற்றி, அதன் மூலமாக மட்டுமே வருவாயைப் பெருக்க முயற்சிப்பது திமுக அரசின் நிர்வாகத் திறனற்றத் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் முத்திரைக் கட்டணம் பன்மடங்கு உயர்வுக்கான அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, மக்கள் மீது சுமையை ஏற்றாமல் அரசின் வருவாயை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
என்டிஏவில் அமமுவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன் -
இரட்டை இலை வேண்டாம்.. குக்கர் சின்னமே போதும்.. அமித்ஷாவிடம் சொல்லிவிட்ட டிடிவி தினகரன்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications